Search the blog

Custom Search

தமிழகம்,

posted by Bsi Gani

 நேற்று சென்னையில் கையில் 2 துப்பாக்கியுடன் பொது மக்களை பீதி வயப்படுத்தி,போலிசார் மீது விளக்குமாரு போன்ற பொருட்களை எறிந்த விஜயஹர் என்பவர் மீது ஆக்‌ஷன் எடுக்காத காவல்துறையை பொது மக்கள் காறி உமிழ்கின்றனர்.

ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் உண்டாம்.அப்ப மற்றொரு துப்பாக்கி?சரி லைசென்ஸ் இருந்தா பட்டப்பகலில் ரவுடித்தனம் செய்யலாமா?அவர் சுட்ட தோட்டா யார்மீதாவது பாய்ந்திருந்தால் பாதிக்கப்பட்டவரின் உயிரை காவல்துறையும்,இந்த குடிகார விஜயஹரும் கொடுக்க முடியுமா?

என்னய்யா நடக்குது தமிழகத்துல.ஆளுக்கு ஒரு நீதி.இந்த தவறை ஒரு முஸ்லீமோ தாழ்த்தப்பட்டவனோ செய்திருந்தால் குண்டர்சட்டம்,தேசிய பாதுகாப்பு சட்டம்னு அவன் குடும்பத்தையே தெருவுக்கு இழுத்து நாசமாக்கி விடுவார்கள்.

பெரிய குடும்பத்தை சார்ந்தவராம்,மன நிலை பாதிக்கப்பட்டவராம்,மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லும் முன்னே போலிசே இவர்க்கு சர்டிபிகேட் குடுக்குது.

கையில் ஆயுதம் இல்லாமல் சட்டத்தை மட்டுமே தம்து ஆயுதமாக கருதி போராடிய கிச்சன் புஹாரி போன்ற அப்பாவி முஸ்லீம்களை மரனம் வரை இழுத்துச்செல்லும் காவல்துறை மற்றவர்களை அது போன்று நடத்துவதில்லை.

அநீதியாக செயல்படும் அரசு அதிகாரிகளை எச்சரிக்கிறேன்.நீதி ஒரு போதும் சாகாது.பாதிக்கப்பட்டவ்ர்களின் பிராத்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.உங்களுக்கும் மனைவி,குழந்தைகள் என உண்டு,அப்பாவிகளை வயிற்றில் அடித்து பாவத்தை சம்பாதித்துக்கொள்ளாதீர்கள்.

பாதிக்கப்பட்டவ்ர்களின் குடும்பங்கள் கதறுவதை போல் அநீதி செய்த உங்கள் குடும்பமும் ஒரு நாள் கதறி அழும்.மனித நீதி புதைக்கப்படலாம்.ஆனால் இறைவன் நிச்சயம் நீதி செலுத்துவான்.

எனவே பாதிக்கப்பட்டவ்னின் பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.
அத்துமீறாதீர்கள்.

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

The posts/comments made by the members are not the opinion of the Admins nor do the Admins endorse the opinion of the members.

link

Related Posts Plugin for WordPress, Blogger...